உலகின் முண்ணனி இணையதள சேவை நிறுவனமான யாகூ, சமீபகாலமாக வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்நிலையில் யாகூவில் மின்னஞ்சல் கணக்குகளை வைத்திருக்கும் பயனாளர்களை, அந்நிறுவனம் உளவு பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கென மென்பொருள் ஒன்றையும் அந்த நிறுவனம் உருவாக்கியுள்ளதாக தெரிகிறது.
தங்களுக்கு இது போன்ற கோரிக்கைகள் வரவில்லை எனவும், அப்படி வந்தால் அதை சட்டரீதியாக எதிர்கொள்வோம் எனவும் கூகுள், பேஸ்புக், டிவிட்டர் ஆகிய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.