அதற்கு மிகவும் அழகாக பதிலளித்து ஹேரி, கேசிக்கு ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பியிருக்கிறார். இதில் மகிழ்ந்துபோன கேசியும், ஹேரியும் தொடர்ந்து ஒரு வாரம் எஸ்.எம்.எஸ் களிலேயே நட்பை வளர்த்தனர். ஒரே மாதிரியாக இருந்த ரசனை மற்றும் சிந்தனை இருவரையும் ஒன்றினைத்தது.
ஒருவாரம் கழித்து இருவரும் நேரில் சந்தித்தனர். அப்போது தன்னை விட முப்பது வயது மூத்த கேசியை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக ஹேரி தெரிவித்திருக்கிறார். இதற்கு கேசியும் சம்மதம் தெரிவித்ததால்,இவர்கள் இருவரும் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.