கடந்த 1972 முதல் 2009ஆம் ஆண்டு வரை இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்தது. அதில் 1 லட்சம் பேர் பலியாகி உள்ளதாக ஐ.நா. சபை கணக்கிட்டுள்ளது. மேலும், விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே இங்குதான் இறுதிகட்ட போர் உச்சகட்டமாக நடந்தது. அப்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இலங்கையில் வருகிற ஜனவரி 8ஆம் தேதி அந்த நாட்டிற்கான அதிபர் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதில் தற்போதைய அதிபர் ராஜபக்சே 3ஆவது தடவையாக போட்டியிடுகிறார். நேற்று அவர் தமிழர்கள் அதிகம் வாழும் முல்லைத்தீவு பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்தார்.