கணவரின் மீசை பிடிக்காததால் தனக்கு விவாகரத்து பெற்றுத்தரும்படி தென்னாப்பிரிக்க நாடு அல்ஜீரியாவை சேர்ந்த இளம்பெண் கணவன் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணமான அந்த இளம்பெண், இதுதொடர்பாக தலைநகர் அல்ஜீயர்ஸ் நகரில் உள்ள கோர்ட்டில் ஆஜராகி நீதிபதியின் முன்னிலையில் வாக்குமூலம் அளித்தார். அப்பொழுது திருமணத்துக்கு பின்னர் மீசையை எடுத்து விடுவதாக எனது கணவர் எனக்கு வாக்குறுதி அளித்தார். வாக்குறுதியை நம்பி நான் திருமணத்திற்க்கு சம்மதம் தெரிவித்தேன் .அதற்கு பின்னர் எங்களுக்கு திருமணம் நடந்தது. ஆனால் மூன்று மாதங்கள் ஆகியும் இன்னும் அவர் மீசையை எடுக்கவில்லை. தற்போது மீசையை இழக்க எனக்கு விருப்பமில்லை என எனது கணவர் என்னிடம் கூறிவருகிறார்.