மேலும், இந்த விவகாரத்தில், சோனியா காந்தி மீது அங்குள்ள மாகாண நீதிமன்றத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு நீதிபதி பிரையன் கோகன் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, இந்த வழக்கில் உள்ள சம்பவங்களும் அமெரிக்காவுக்கு வெளியே நடைபெற்றுள்ளதாகக் கூறி, இந்த மனுவை தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து சீக்கிய அமைப்பு, அங்குள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த மூன்று பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு, மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்து மனுவை தள்ளுபடி செய்தது.