போர் எதிரொலி: அகதிகலான 8.36 லட்சம் உக்ரைன் மக்கள்!

புதன், 2 மார்ச் 2022 (16:35 IST)
8.36 லட்சம் உக்ரைன் மக்கள் இதுவரை அகதிகளாக மாறி உள்ளதாக ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது. 

 
உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யா அண்டை நாடான உக்ரைன் மீது கடந்த 7 நாட்களாக போர் தொடர்ந்து வருகிறது. இதனால் உக்ரைனிலிருந்து பல நாட்டு மக்களும் எல்லைகள் வழியாக அண்டை நாடுகள் சென்று சொந்த நாடுகளுக்கு தப்பி வருகின்றனர்.
 
இந்நிலையில் 8.36 லட்சம் உக்ரைன் மக்கள் இதுவரை அகதிகளாக மாறி உள்ளதாக ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது. ஆம், ரஷ்ய படையினரின் தாக்குதலால் உக்ரைன் நாட்டில் இருந்து இதுவரை 8.36 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு சென்று தஞ்சம் அடைந்துள்ளதாக ஐ.நா வருத்தம் தெரிவித்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்