குகை ஆய்வுக்காக கடந்த வார அங்கு சென்ற மூன்று பேர் அடங்கிய குழு, குகையினுள் இறங்கி ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர். அப்போது பாறை ஒன்று சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஒருவரது தலையிலும், உடலிலும் காயம் ஏற்பட்டுள்ளது.
குகை செங்குத்தாக இருப்பதால் அவர்களை மீட்பது மிகவும் சிக்கலாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 350 மீட்டர் ஆழம்வரை இறங்குவது எளிமை என்றும், ஆனால் அதற்குப்பிறகு பாதை செங்குத்தாக இருப்பதால், கயிற்றின் மூலம்தான் இறங்க முடியும் என்றும் மீட்பு குழு அதிகாரிகளுள் ஒருவரான கிளமென்ஸ் ரெய்ண்டில் தெரிவித்துள்ளார்.