சத்தம் கேட்டு அந்த அறைக்கு விரைந்த குழந்தைகளின் தாய், உடனடியாக குழந்தையை தூக்கிகொண்டு மருத்துவமனைக்கு சென்றார். முதலில் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது, அந்த மருத்துவமனையில் குழந்தை பரிதாபமாக இறந்தது.
இச்சம்பவம் குறித்து தெரிவித்த காவல் துறை உயர் அதிகாரி, இச்சம்பவம் மிகவும் வருத்தமளிப்பதாகவும். ஆனால், பெற்றோர் சிறிது கவனத்தோடு இருந்திருந்தால் இந்த சம்பவத்தை தடுத்திருக்க முடியுமெனவும் கூறினார்.