சம்பவத்தன்று, வீட்டில் தம்பியுடன் திருடன் போலிஸ் விளையாடியபோது, அண்ணனின் கண்ணிற்கு குளிர்சாதனப்பெட்டியின் மீது இருந்த ஒரு துப்பாக்கி கண்ணில் பட்டிருக்கிறது. அதை எடுத்த தம்பியை சுட்டுள்ளான் அந்த ஆறு வயது சிறுவன். துப்பாக்கியிலிருந்து கிளம்பிய தோட்டாக்கள் மூன்று வயது சிறுவனைன் தலையில் பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே அந்த சிறுவன் உயிரிழந்தான்.
போலிஸ் விசாராணையில், சில நாட்களுக்கு முன்புதான் மைக்கேல், அந்த துப்பாக்கியை சட்டவிரோதமாக வாங்கியதாகவும், அதை தன் குழந்தையிடம் காட்டியதாகவும் தெரிவித்திருக்கிறார்.