அப்போது, சினிமா பார்க்கும் கூட்டத்தில் இருந்து எழுந்த ஒரு நபர், தனது துப்பாக்கியால், அருகில் உள்ளவர்களை எல்லாம் சரமாரியாக தனது துப்பாக்கியால் சுட்டான். இதனால் அங்கிருந்தவர்கள் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள நாலா திசையிலும் சிதறி ஓட்டம் பிடித்தனர். சிலர் உயிர் பிழைக்க சீட்டுக்கு அடியில் பதுங்கிக் கொண்டனர். இந்த தகவலை சிலர் தங்களது செல்போன் மூலம் அமெரிக்க காவல்துறைக்கு தெரியப்படுத்தினர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை, அந்த சினிமா தியோட்டரை முற்றுகையிட்டு, அதிரடியாக உள்ளே நுழைந்தனர். அங்கு 2 பேர் உயிரிழந்ததும், 8 பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை பார்த்தனர்.