ஒரு இளம் பெண்ணுக்கு இரண்டு பிறப்புறுப்பு உள்ளது என்றும் அவர், தற்போதும் மற்றவர்களைப் போலவே இயல்பாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி, உலகையை அதிர்சியும், ஆச்சர்யப்படவும் வைத்துள்ளது.
உலகில் எந்த நாட்டில் பிறந்த மனிதனாக இருந்தாலும், அவர்களுக்கு, இரண்டு கண்கள், இரண்டு காதுகள், இரண்டு கைகள், இரண்டு கால்கள், இரண்டு சிறுநீரகங்கள் என இருக்கும்.
ஆம், கேஸான்டிரா பங்க்சன் (Cassandra Bankson) எ்ன்ற அந்த 22 வயது பெண் இயல்பான நிலையிலே உள்ளதாகவும், ஆனால் அவ்வப்போது அவருக்கு உடல்நீதியான பயம் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து அந்த இளம் பெண்ணே, யூ ட்யூபில் சுயமாக ஒரு பேட்டியும் அளித்துள்ளார். அதில், இந்தசம்பவம் எனக்கு தெரியாது. மருத்துவர்கள் உதவியுடனே தெரிய வந்தது. ஆரம்பத்தில் நான் மிகவும் பயந்துவிட்டேன். ஆனால், காலம் செல்ல செல்ல அந்த பயம் போய்விட்டது. ஆனால், எனது திருமண வாழ்க்கை குறித்து ஒரு திகில் உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த பெண் விவரகாரம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஸ்வரூபம் எடுத்தது. பின்பு அப்படியே அமுங்கிப்போனது.
இந்த பேட்டி மிகவும் பிரபலாமாகி உள்ளது. இந்த வீடியோவை இதுவரை சுமார் 14 லட்சம் பேர் பார்த்து வியந்துள்ளனர். தற்போது, இந்த பெண் உடல் நிலை குறித்து, மருத்துவ உலகம் கவலை கொண்டுள்ளது.