பிரதமர் யிங்லக் ஷினாவத்ரவையும் காபினட் அந்தஸ்துடைய அமைச்சர்கள் ஒன்பது பேரையும் பதவி நீக்கி இரண்டு நாளாகும் நிலையில், இடைக்கால அரசு அகற்றப்பட வேண்டும் எனக் கோரி பாங்காக் வீதிகளில் ஆயிரக்கணக்கானோர் ஊர்வலம் சென்றிருந்தனர்.
அரசாங்கத்தை கலைத்துவிட்டு, திட்டமிடப்பட்டுள்ள தேர்தல்களை ஒத்திவைத்துவிட்டு அரசியல் சீர்திருத்தங்களுக்கு வழிவிட வேண்டும் எனக் கோரி தாய்லாந்தில் ஆறு மாதங்களுக்கும் மேலாக ஆர்ப்பாட்டங்கள் நடந்துவருகின்றன.