இதனை தடுக்க முயன்ற மார்டினின் தலையில் கல்லை போட்ட அந்த நபர் அதன் பிறகு சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார். தலையில் படுகாயம் அடைந்ததால் சிறுவன் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட, பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில், சகோதரியை காப்பாற்ற தனது உயிரை இழந்த சிறுவனுக்கு பலரும் அஞ்சல் செலுத்திவருகின்றனர். இது குறித்து தெரிவித்த ஒருவர், மார்ட்டினும் அவரது சகோதரியும் எப்போதும் ஒற்றுமையாகத்தான் இருப்பார்கள். மார்டின், அவரது சகோதரியை பாதுகாக்க தைரியமாக போராடியதை பாராட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.