தைவானில் விமான விபத்து: 51 பேர் பலி

வியாழன், 24 ஜூலை 2014 (08:24 IST)
தைவானில் அவசரமாக விமானம் தரையிறங்கியபோது ஏற்பட்ட பயங்கர விபத்தில் 51 பேர் பலியாகினர்.

தைவானில் அவசரமாக விமானம் தரையிறங்கியபோது எதிர்பாராத விதமாகக் கீழே விழுந்து சொறுங்கியது. விமானம் விழுந்த இடத்தில் உடனடியாக தீயணைப்பு படையினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது 7 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். 51 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து தைவான் விமானபடை அதிகாரிகள் கூறுகையில். “விபத்துக்குள்ளான விமானம் ட்ரான் ஏசியா ஏர்வேய்ஸ்க்கு சொந்தமானது. இதில் 54 பேர் பயணித்தனர். விமானம் அவசரமாக தரையிறங்க முயன்றபோது திடீரென விழுந்து நொறுங்கியது“ என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் உக்ரைன் வான் எல்லையில் மலேசிய விமானம் விபத்துக்கு உள்ளானதில் 298 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்