துருக்கி சிரியா எல்லையில் உள்ள காஷியான்டெப் நகரத்தில் நேற்று ஒரு திருமண விழா நடந்தது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மக்கள் அனைவரும் கூடியிருந்த நேரத்தில், தற்கொலை படை பயங்கரவாதி உள்ளே புகுந்து, வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளான்.
இந்த தாக்குதல் திடீரென்று நடத்தப்பட்டதால், அப்பகுதியில் பெரும் பதட்டமும், பரபப்பும் நிலவி வருகிறது. இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.