பக்ரீத் தொழுகையில் தற்கொலை படை தாக்குதல்

செவ்வாய், 13 செப்டம்பர் 2016 (15:38 IST)
பாகிஸ்தானில் பக்ரீத் தொழுகையில் தற்கொலை படை தாக்குதல் நடந்துள்ளது. இதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.


 


 
பாகிஸ்தானின் தெற்கு சிந்து மாகாணத்தில் ஷிகாப்பூர் பகுதியில் உள்ள ஷியாபிரினரின் மசூதி உள்ளது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று சிறப்பு தொழுகை நடைப்பெற்றது.
 
அப்போது மசூதிக்கு வெளியே தற்கொலை படை பயங்கரவாதி வெடிக்கச் செய்ததில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். அதில் இரண்டு பேர் காவல்துறையினர்.
 
இதேபோல் மற்றொரு மசூதியில் தக்குதல் நடத்த முயன்ற தற்கொலை படை பயங்கரவாதி பிடிப்பட்டார். பாகிஸ்தானில் சிறப்பாக கொண்டாடக்கூடிய பக்ரீத் பண்டிகையின் போது நடந்த இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்