பறிபோகிறது மஹிந்தா ராஜபக்சே பதவி: கோத்தபய ஒப்புதல்

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (15:42 IST)
இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி பறிபோக இருப்பதாகவும் அவரை பதவியில் இருந்து நீக்க அதிபர் கோத்தபயா ராஜபக்சே ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரும் பதவி விலக வேண்டும் என பொது மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்
 
இந்த நிலையில் கடும் போராட்டம் காரணமாக பிரதமர் மஹிந்த ராஜபக்சே பதவியை நீக்க அதிபர் கோத்தபய ராஜபக்சே ஒப்புக்கொண்டதாக இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்