இலங்கை என்ன இந்தியாவின் ஒரு மாநிலமா? ஆவேசமான ராஜபக்சே!

புதன், 19 ஜனவரி 2022 (13:19 IST)
இலங்கை என்ன இந்தியாவின் ஒரு மாநிலமா? எதற்கெடுத்தாலும் தமிழ்நாட்டில் உள்ள தலைவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுகின்றனர் என்று இலங்கை பிரதமர் ராஜபக்சே ஆவேசமாக கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய பிரதமருக்கு தமிழக முதல்வர் உள்பட தமிழக தலைவர்கள் கடிதம் எழுதியும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்
 
இது குறித்து கருத்து தெரிவித்த இலங்கை பிரதமர் ராஜபக்சே, ‘இலங்கை என்ன இந்தியாவின் ஒரு மாநிலமா? இலங்கையை தட்டிக்கேட்க சொல்லி தமிழக தலைவர்கள் இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வருகின்றனர். நாங்களும் ஒரு தனி நாடு தான் எங்களை கட்டுப்படுத்த யாராலும் முடியாது என்று அவர் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்