நவம்பர் 2011ல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற தங்கச்சிமடம் மீனவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர். போதைப் பொருள் கடத்தியதாக பிரசாத், அகஸ்டஸ், வில்சன், எமர்சன், லாங்லட் என்ற 5 பேரும் வெளிக்கடை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இருப்பினும், இவர்கள் 8 பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 14 ஆம் தேதிக்குள் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்யலாம். குற்றவாளிகள் தரப்பில் அனில் சில்வா, ஷராஃபி மொஹிதீன், ஸ்ரீகாந்த் ஆகிய வழக்கறிஞர்கள் ஆஜராகினர். கொழும்பு உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாகவும் அறிவித்தனர்.