சோமாலியா தலைநகர் மொகதிசுவில் ஒரு நட்சத்திர ஹோட்டல் உள்ளது. இங்கு அரசு அதிகாரிகள், வெளிநாட்டு தூதர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்குவது வழக்கம். நேற்று முன்தினம் மதியம் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் திடீரென இந்த ஹோட்டலுக்குள் புகுந்தனர்.
ஹோட்டல் மீதான தாக்குதலுக்கு அல் ஷபாப் தீவிரவாதிகள் அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘அரசு அதிகாரிகளை மட்டுமே நாங்கள் கொல்வோம். அப்பாவி மக்களை விடுவித்து விடுவோம்’ என்று தெரிவித்தார்.