அவனுக்கு பின்னால் அமர்ந்திருந்த மாணவிகள், ஹர்சுக் சிங்கை ’தீவிரவாதி, தீவிரவாதி’ என்று அழைக்கின்றனர். சிறிது நேரம் அமைதியாக இருக்கும் சிறுவன் ஹர்சுக் சிங், ’எனக்கு ஒரு கவலையுமில்லை’ என்று கூறுகிறான்.
இது தொடர்பான வீடியோவை சிறுவன் வெளியிட்டுள்ளான். மேலும், இது குறித்து அவன் கூறுகையில், "என்னுடன் இருக்கும் மற்ற மாணவர்கள் என்னிடம் இனவெறியுடன் நடந்து கொள்கின்றனர், என்னை ஆப்கானிஸ்தான் தீவிரவாதி என்று அழைக்கின்றனர்.
என்னிடம் நடந்து கொள்வதுபோல் மற்றவர்களிடம் இதுபோன்று இனி நடந்துக் கொள்ளாதீர்கள். உங்களுக்கு தெரியாதா, நான் இஸ்லாமியர் இல்லை, நான் சீக்கியர் என்று" என தெரிவித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெகுவாகப் பரவி கடும் விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது.