சிவசேனாவை தீவிரவாத இயக்கமாக அறிவிக்க வேண்டும்: பர்வேஸ் முஷரப்

புதன், 4 நவம்பர் 2015 (13:37 IST)
சிவசேனாவை தீவிரவாத இயக்கமாக அறிவிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் அதிபர்  பர்வேஸ் முஷரப் கூறியுள்ளார்.


 

 
இது குறித்து தனியார் தொலைகாட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியளித்த முஷரப் கூறியதாவது:-
 
காங்கிரஸ் மற்றும் பாஜக தலைமையிலான இந்திய அரசுகளுடன் நான் பழகியுள்ளேன். என்னைப் பொருத்தமட்டில் தற்போதைய கேள்வி, கட்சிகளைப் பற்றியது அல்ல மாறாக தனிநபர் தொடர்பானது.
 
இந்தியாவின் தற்போதைய புதிய பிரதமர் தொடர்பானது. வாஜ்பாய் மிகவும் நல்ல மனிதர். அவர் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார். சோனியா காந்தியும் அப்படிதான்.
 
எனவேதான், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தை முன்னர் முன்னேற்றப் பாதையை நோக்கிச் சென்றது. ஆனால், பாகிஸ்தான் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான மனப்போக்கில் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி செயல்பட்டு வருகிறார்.
 
இந்தியாவில் இயங்கிவரும் சிவசேனா கட்சியை தீவிரவாத இயக்கமாக அறிவிக்க வேண்டும். சிவசேனாவின் நடவடிக்கைகளை ஐ.நா.சபை கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.  இவ்வாறு முஷரப் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்