இறந்த தாத்தாவுடன் செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக்கில் வெளியிட்ட சிறுவன்

புதன், 1 ஜூலை 2015 (20:28 IST)
சவுதி அரேபியாவில் சிறுவன் ஒருவன், தனது இறந்த தாத்தாவுடன் செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளான்.
 
சமூக வலைதளங்களில் செல்ஃபி எனப்படும் தன்னைத் தானே புகைப்படம் எடுத்து வெளியிடும் மோகம் அதிகரித்துள்ளது. இதுவும் ஒரு வகையிலான மனநோய் என்று உளவியலாளர்களும், மருத்துவர்களும் கூறி வந்தாலும் இதற்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
 
இந்நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் இறந்து போன தனது தாத்தாவின் படுக்கையில் இருந்து தனது மொபைல் போனில் செல்பி எடுத்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளான். மேலும், அதில் ’விடைபெறுங்கள்... தாத்தா..’ என்று குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்தைப் பெற்றுள்ளது. மனித உணர்வுகள் மழுங்கிவிட்டதாக அங்குள்ள சில சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
 
மேலும் ஒருவர் கூறுகையில், “இது போன்ற இளைஞர்கள் மூர்க்கத்தனமான அணுகுமுறைகள் மேற்கொள்வதில் ஆர்வம் செலுத்துவது சமூகத்திற்கு அதிர்ச்சி அளிக்கிறது” என்றார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்