சமூக வலைதளங்களில் செல்ஃபி எனப்படும் தன்னைத் தானே புகைப்படம் எடுத்து வெளியிடும் மோகம் அதிகரித்துள்ளது. இதுவும் ஒரு வகையிலான மனநோய் என்று உளவியலாளர்களும், மருத்துவர்களும் கூறி வந்தாலும் இதற்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் இறந்து போன தனது தாத்தாவின் படுக்கையில் இருந்து தனது மொபைல் போனில் செல்பி எடுத்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளான். மேலும், அதில் ’விடைபெறுங்கள்... தாத்தா..’ என்று குறிப்பிட்டுள்ளார்.