பள்ளிக் கூடத்தில் தீ விபத்து... 28 மாணவர்கள் பலி ...பதறவைக்கும் சம்பவம்

புதன், 18 செப்டம்பர் 2019 (21:32 IST)
மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியா தலைநகர் மொன்ரோவியாவில் உள்ள ஒரு  பள்ளியில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கிய 28 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் பரிதாபமால பலியாகினர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியா தலைநகர் மொன்ரோவியாவில்  உள்ள ஒரு இஸ்லாமிய பள்ளியில் இன்று திடீரென்று தீ பிடித்து அனைத்துப் பகுதிகளுக்கும் பரவியது. இதனால் பள்ளியில் படித்துவந்த 28  மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்கள் இந்த தீயில் சிக்கி உயிரிழந்தனர்.
 
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த, தீயணைப்புத்துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து, காயமடைந்த மாணவர்களையும்,ஆசிரியர்களையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த எதிர்பாராத விபத்திற்கு அந்த நாட்டு அதிபர் ஜார்ஜ் வே தனது ஆழ்ந்த இரங்கலை கூறியுள்ளார். இந்த விபத்து அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்