சவுதியில் அல் தயர் நகரில் உள்ள அந்த பள்ளிக்குள் நுழைந்த ஆசிரியர், பள்ளியின் முதல்வர் மற்றும் அதிகாரிகள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இந்த துப்பக்கி சூட்டில் 6 பேர் பலியானதாகவும், 4 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
பள்ளியின் முதல்வருக்கும், தாக்குதல் நடத்திய ஆசிரியருக்கும் முன் விரோதம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அந்த ஆசிரியருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது. எனினும் இந்த துப்பாக்கி சூட்டுக்கு அதிகாரப்பூர்வ காரணங்கள் எதுவும் கூறப்படவில்லை.