ஹோட்டல்கள் மற்றும் பல்வேறு தொழில்களை நடத்தி வரும் இளவரசர் அல்வலித் பின்தலால் விளையாட்டு அணிகளையும் சொந்தமாக நடத்தி வருகிறார். இவர் தனது வருமானத்தில் பெரும் பகுதியை சமூக சேவைக்காக பயன்படுத்தி வருகின்றார். சவுதி இளவரசர் அல்வலீத் பின் தலால்-க்கு ரூ. 2 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளது. இவை அனைத்தையும் தர்மம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.
குறிப்பாக, நாட்டில், சமூக மேம்பாடு மற்றும் பெண்கள் முன்னேற்றம், இளைஞர்கள் மேம்பாடு மற்றும் பேரிடர் நிவாரணம் போன்ற நல்ல விஷயங்களுக்காக எனது சொத்துகள் அனைத்தையும் தர்மம் செய்ய விரும்புகிறேன். தர்மம் செய்வது குறித்து திட்டம் வகுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.