இந்நிலையில், இந்த நூலகத்தின் இரண்டாவது மாடியில் எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ சில நிமிடங்களில் மள மளவென பரவியது. இந்தத் தீயால் அந்த நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த பல அரிய ஆவணங்கள் தீக்கிரையானதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, அங்கு விரைந்து வந்த சுமார் 200 க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் கடுமையாகப் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் 1 மில்லியன் ஆவணங்களுக்குமேல் சேதமடைந்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.