ரான்சம்வேர் வைரஸ் தாக்காமல் இருக்க புனித நீர் தெளித்த ரஷ்யா

வெள்ளி, 19 மே 2017 (16:09 IST)
ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு துறைக்கு தகவல் கொடுக்கும் தொழில்நுட்ப பிரிவில் உள்ள கணினிகளை ரான்சம்வேர் வைரஸ் தாக்காமல் இருக்க பாதிரியாரை அழைத்து வந்து புனித நீர் தெளிக்க செய்துள்ளனர்.


 

 
ரான்சம்வேர் வைரஸ் தாக்குதலால் உலகம் முழுக்க அனைத்து துறைகளும் அச்சத்தில் உள்ளது. கணினிகளை முடக்கி அதிலிருந்து தகவல்களை திருடிக்கொண்டு, தகவல்களை பெற பணம் கேட்டு வருகின்றனர். இந்த வைரஸ் தாக்குதலில் சிக்காமல் இருக்க அனைத்து நாடுகளும் போராடி வருகிறது.
 
ரான்சம்வேர் வைரஸ் தாக்குதலுக்கு பயந்து பெரும்பாலான நிறுவனங்கள் கணினிகளை இயக்காமால் உள்ளனர். இந்நிலையில் ரஷ்யாவில் நடந்த சம்பவம் உலகம் முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு துறைக்கு தகவல்கள் கொடுக்கும் தொழில்நுட்ப பிரிவில் உள்ள கணினிகளை வைரஸ் தாக்காமல் இருக்க, அருகில் உள்ள பாதிரியாரை அழைத்து வந்து புனித நீர் தெளிக்க செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்