இந்த தாக்குதலில் தீவிரவாதிகளின் அரண்கள், பதுங்கு குழிகள், விமான எதிர்ப்பு பீரங்கிகள், ஆயுத கிடங்குகள் அழிக்கப்பட்டன. 30க்கும் அதிகமான தீவிரவாதிகள் இந்த தாக்குதலில் பலியானதாக கூறப்படுகிறது. அங்குள்ள மருத்துவமனை தவிர அனைத்து இடங்களிலும் குண்டு வீச்சு நடந்ததாக கூறப்படுகிறது. தாக்குதலில் பலியானவர்களில் பலர் அப்பாவி பொதுமக்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.