குடியரசுத் தின விழாவுக்கு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள வருகை தந்துள்ள, ஒபாமாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள வெள்ளை மாளிகை ‘ஜெய்ஹிந்த்’ என செய்தி வெளியிட்டது.
ஒபாமாவை குடியரசு தினவிழாவுக்கு அழைத்து கவுரவப்படுத்தியதுடன், இந்தியா-அமெரிக்கா உறவில் புதிய அத்தியாயம் தொடங்கி உள்ளது என்றும், தலைநகர் டெல்லியில் சூரியன் உதித்துள்ளதாகவும் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.