போராட்டத்தில் ஈடுபடும் மக்களை சந்தித்து விளக்கம் அளிக்க அந்நாட்டு பிரதமர் வாங் கியோ ஆன் அந்த பகுதிக்கு சென்றார். அந்த கிராம மக்களிடம் இது குறித்து விளக்கம் அளிக்க பிரதமர் முயன்றார். அவரது விளக்க உரையை கேட்காமல் அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். அத்துடன், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், பிரதமரின் வாகனத்தின் மீது முட்டைகளை வீசியும், தண்ணீர் பாட்டில்களை வீசியும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதை அடுத்து, பாதுகாப்பிற்கு வந்த காவல்துறையினர் கூட்டத்தினரை கட்டுப்படுத்தி பிரதமரை பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.