ஓரின சேர்க்கையாளர் பேரணியை தொடங்கி வைத்த முதல் பிரதமர்

செவ்வாய், 5 ஜூலை 2016 (14:43 IST)
முதல்முறையாக கனடாவில் பிரதமர் தலைமையில் லட்சக் கணக்கானோர் பங்கேற்ற ஓரின சேர்க்கையாளர் பேரணியை தொங்கி வைக்கப்பட்டது.


 

 
கனடாவில் ஓரின சேர்க்கையாளர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதையோட்டி தலைநகர் டொராண்டோவில் ஓரின சேர்க்கையாளர்கள் மிக பிரமாண்டமான பேரணி ஒன்றை நடத்தினர்.
 
அதில் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கானோர் பக்கேற்றனர். பேரணி தொடங்க தயாராக இருந்த நிலையில் திடீரென்று அந்நாட்டு பிரதமர் வருகை தந்து அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தார்.
 
அதோடு பேரணியையும் தொடங்கி வைத்தார். கனடா நாடு வரலாற்றில் முதல் முறையாக அந்நாட்டு பிரதமர் கலந்து கொண்டார். இதுவரை இருந்த் கனடா நாட்டு பிரதமர்கள் யாரும் கலந்து கொண்டதில்லை.
 
தற்போது இப்போதுள்ள பிரதமர் ஜஸ்டின் டிருடியோ கலந்து கொண்டு சரித்திர சாதனை படைத்தார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்