விமான நிலையத்தில் ஓடிய ஆபாசப்படம் : பயணிகள் அதிர்ச்சி

செவ்வாய், 20 அக்டோபர் 2015 (18:55 IST)
விமான நிலையத்தில் திடீரென ஆபாசப்படம் ஓடிய சம்பவம் போர்ச்சுகல் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
போர்சுகல் நாட்டின் தலைநகர் லிஸ்பெனில் இருக்கும் விமான நிலையம், உலகின் மிகப்பெரிய விமான நிலையங்களில் ஒன்றாகும். வருடந்தோறும் சுற்றுலா பயணிகள் கோடிகணக்கில் இந்த விமான நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இருந்தபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சியில், முனகல் சத்தத்துடன் ஆபாசப்படம் ஓட தொடங்கியது. இதைக் கண்டு அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
 
அந்த ஆபாசப்படம் சுமார் பதினைந்து நிமிடம் ஓடியது. இதை வீடியோவாக எடுத்து பலர் தங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்