வாடிகன் திரும்பினார் போப் பிரான்சிஸ்

திங்கள், 28 செப்டம்பர் 2015 (08:08 IST)
கியூபா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்ட போப் பிரான்சிஸ் வாடிகன் திரும்பினார்.


 
 
உலக கத்தோலிக்க மதத் தலைவரான போப் பிரான்சிஸ்  கியூபா மற்றும் அமெரிக்க ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்தார்.
 
தனது சுற்றுப்பயணத்தின் ஒருபகுதியாக கடந்த 19 ஆம் தேதி கியூபா சென்ற அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கியூபாவின் முன்னாள் அதிபரான பிடல் காஸ்ட்ரோவை, போப் பிரான்சிஸ் சந்தித்து பேசினார். அப்போது போப் பிடலுக்கு பரிசுகளை வழங்கினார்.
 
கியூப பயணத்தை முடித்துக் கொண்ட போப் ஆண்டவர், கடந்த 23 ஆம் தேதி அமெரிக்கா சென்றடைந்தார். மேரிலேண்டில் உள்ள ஆண்ட்ரூஸ் விமான நிலையத்திற்கு வந்த அவரை, அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா வரவேற்றார். அமெரிக்கவில் ஆறு நாட்கள் தங்கியிருந்த போப் பிரான்சிஸ் நேற்று இரவு தனி விமானம் மூலம் வாடிகன் திரும்பினார். 

வெப்துனியாவைப் படிக்கவும்