சிங்கப்பூரை நிறுவியவர் என்று அறியப்படும் லீ குவான் யூ-வின் இறுதி நிகழ்வில் குடும்ப உறுப்பினர்கள், பொதுமக்கள், மதத் தலைவர்கள் மற்றும் பன்னாட்டுத் தலைவர்கள் உட்பட பலர் பங்குபெற்றனர்.
ஒரு நிமிடம் மவுன அஞ்சலிக்குப் பின்னர், மிகவும் நெருங்கியவர்கள் மட்டுமே பங்குபெறும் வகையில் அவரது உடல் தகனம் செய்யப்படுவதற்காக எடுத்துச் செல்லப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.