இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து எமிலாவின் உடலை மீட்டனர். விசாரணையின் போது எமிலாவின் மகன் ஸ்டீபன் மிட்ராய் வீட்டின் பாதுகாப்பிற்காக அந்த நாயை வளர்த்திருப்பது தெரிய வந்தது. இனக்கலப்பு செய்யப்பட்ட பிட்புல் வகையைச் சேர்ந்த அந்த நாய் மூர்க்கத்தனமான குணம் கொண்டது என்று கூறப்படுகிறது. இதையடுத்து நாயை கட்டுப்பாடில் வைக்காத குற்றத்திற்காக ஸ்டீபன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.