1955ம் ஆண்டில் வரையப்பட்ட இந்த ஓவியம், அந்தப்புரக் காட்சி ஒன்றை வண்ணமயமாக, கியூபிஸ்ட் ஓவிய முறையில் சித்தரிக்கிறது.
இதே ஏலத்தில் சுவிட்சர்லாந்து கலைஞர் அல்பெர்டோ ஜியாகொமெட்டி செய்த வெண்கல சிலை ஒன்று மிக அதிக விலைக்கு, அதாவது 141 மிலியன் டாலர்களுக்கு ஏலம் போய், உலகின் மிக அதிக விலை மதிப்புள்ள சிற்பம் என்ற பெயரைப் பெற்றுள்ளது.