உயிருக்குப் போராடிய நபர் : படம் பிடித்த மக்கள்

சனி, 3 நவம்பர் 2018 (20:17 IST)
நெதர்லாந்தின் ஹேக் நகரத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஒரு நபரை காப்பாற்ற, காவல்துறை அதிகாரியான கெர்வினும் அவருடன் பணிபுரிபவர்களும் முயற்சிக்க, அங்கு திரண்டிருந்த மக்கள் அதனை தங்கள் மொபைல் போன்களில் படம் பிடித்துக் கொண்டிருந்தனர்.
"இது உண்மையாக இருக்க முடியாது. அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். ஆனால், மக்கள் அதனை படம் மட்டுமே பிடித்துக் கொண்டிருந்தார்கள்" என்று வருந்துகிறார் அந்நபரின் மனைவி.
 
மக்கள் அந்த நபரை காப்பாற்றாமல் படம் பிடித்துக் கொண்டிருந்ததை காவல்துறை அதிகாரியான கெர்வினாலும் நம்பமுடியவில்லை.இதுகுறித்து நீண்ட பதிவை தனது ஃபேஸ்புக்கில் அவர் பதிவிட்டுள்ளார்.
 
குறிப்பாக அவர் சொல்ல வரும் செய்தி இதுதான் : "அது உங்கள் அன்புக்குரியவராக இருந்தால், நீங்கள் எப்படி உணர்வீர்கள்?"

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்