குடிநீரில் விஷத்தைக் கலந்து பாரிஸ் மக்களை கொல்ல ஐஎஸ் தீவிரவாதிகள் சதி

திங்கள், 23 நவம்பர் 2015 (17:49 IST)
குடிநீரில் கொடிய விஷத்தைக் கலந்து பாரிஸ் மக்களை கொல்ல ஐஎஸ் தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக அஞ்சப்படுகிறது. 


 

பாரிஸ் நகரில் சில நாட்களுக்கு முன் பல்வேறு இடங்களில் ஐஎஸ் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாகினர். இந்நிலையில் பாரிஸ் மக்களை கொல்ல மீண்டும் சதி திட்டம் தீட்டியுள்ளனர்.

இந்த முறை ஐஎஸ் தீவிரவாதிகள் பாரிஸ் நகரில் குடிநீரில் கொடிய விஷத்தைக் கலந்து பொதுமக்களை கொல்ல முயன்று வருகின்றனர். இதையடுத்து, பாரிஸ் நகருக்கு தேவையான குடிநீரை வினியோகிக்கும் ஆறு நீரேற்று நிலையங்களைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்