பாலஸ்தீனத்தை சேர்ந்த மோகியா அல் தபாக்கியை என்ற 12 வயது சிறுமி ஒருவர் அந்த தடுப்பு சுவர் உள்ள பகுதியில் சென்றுள்ளார். அப்பொழுது இஸ்ரேல் ராணுவம் அந்த 12 வயது சிறுமி மீது ரப்பர் குண்டுகளை கொண்டு துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். இஸ்ரேல் ராணுவத்தின் இந்த மனிதாபிமானமற்ற செயல் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.