இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தான்...

புதன், 11 நவம்பர் 2020 (20:33 IST)
இந்தியாவில் காஷ்மீரில் உள்ள புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தானின் திட்டமே காரணம் என்று சமீபத்தில் பாகிஸ்தான் அமைச்சர் அந்நாட்டில் பாராளுமன்றத்தில் கூறியது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது.

இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டிலிருந்து இந்தியா மீது தீவிரவாத தாக்குதல் ஏவப்படுவதையும் அந்நாட்டு ஒப்புக்கொண்டுள்ளது.

ஏற்கனவே தகுந்த ஆதாரங்களுடன் இந்தியா பாகிஸ்தானிடம் கூறியபோதும் அதை ஏங்க மறுத்தது. இந்நிலை பல்வேறு நாடுகளும் அழுத்தம் கொடுத்துவரும் நிலையில் அந்நாட்டு முதன் முறையாக தீவிரவாதத்திற்கான திட்டங்கள் இங்குதான் தீப்படுவதாகவும் ஊக்குவிக்கப்படுவதையும் ஒப்புக்கொண்டுள்ளது.

இதனையடுத்து, அந்நாட்டைச் சேர்ந்த 11 தீவிரவாதிகளை தேடப்படுவோர் என்ற பட்டியலில் சேர்த்துள்ளது.

இதனால் மேலும் சில உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்