பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத அருகே உள்ள மார்கெட்டில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் குறைந்த பட்சம் 20 பேராவது பலியானதாகவும், இத்தாக்குதலில் சுமார் 100 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்தாக்குதலில் காயமடைந்த 100 க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.