நேபாளத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் அந்நாட்டில் சுற்று பயணம் மேற்கொண்டிருந்த ஐரோப்பாவை சேர்ந்த 1000 பேரை காணவில்லை என்றும், இதுவரை 12 பேர் இறந்துள்ளதாகவும் நேபாளத்திற்கான ஐரோப்பா ஒன்றியத்தின் தூதுவர் ரேன்ஸ்ஜ் டேரின்க் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களையும், உயிரிழந்தவர்களையும், மீட்கும் பணி கடந்த 6 நாட்களாக தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை 6134 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.