இதனால் சந்தேகம் அடைந்த ஏஞ்சலா, காவல் துறையிடம் புகார் செய்தார். உடனே அங்கு வந்த காவல் துறையினர் அக்கம் பக்கத்தில் விசாரித்தனர். அப்போது அண்டை வீட்டில் குடியிருக்கும் 42 வயது பெண் ஒரு வாலிபரைக் கொன்று, தடயத்தை மறைக்க அவரது உடல் பாகங்களைத் தீயில் போட்டு எடுத்தும், சமையல் செய்ததும் தெரிய வந்தது.
உடனே அந்தப் பெண்ணைக் கைது செய்து காவல் துறையினர் விசாரித்தனர். விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் பெயர் ஜேம்ஸ் ஷெப்பர் (36) எனக் கண்டுபிடிக்கப்பட்டது. டிரைவராக பணி புரிந்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து வங்கியில் கூட்டாகக் கணக்கு வைத்திருந்தனர். அதைத் தொடர்ந்து வங்கியில் எடுக்கப்பட்ட பணத்தைப் பிரிக்கும்போது ஏற்பட்ட தகராறில் டிரைவர் ஜேம்ஸ் ஷெப்பர் கொலை செய்யப்பட்டார். தடயத்தை மறைக்க, அவரது உடல் பாகங்களைத் தீயிட்டு எரித்ததை அப்பெண் ஒப்புக் கொண்டார்.