இந்நிலையில் பாகிஸ்தானைச் சேர்ந்த தொலைக்காட்சி ஒன்று ஓம் பூரி மரணம் தொடர்பாக ஒரு செய்தி வெளியிட்டது. அதில், மறைந்த ஓம் பூரி பாகிஸ்தான் நடிகர், நடிகைகளுக்கு ஆதரவாக கருத்துக்கள் தெரிவித்து வந்தார். இதனால் நாட்டின் பாதுகாப்புக்கு இவரது கருத்தால் அச்சுறுத்தல் இருந்தது. எனவே இவரை பிரதமர் மோடியும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலும் இணைந்து கொலை செய்துவிட்டதாக செய்திகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.