மிஸ்டுகாலில் காதல்: கற்பை இழந்த பெண்ணின் பரிதாபம்

வியாழன், 11 ஆகஸ்ட் 2016 (10:35 IST)
ஜவுளி கடை ஒன்றில் வேலை பார்த்து வந்த இலங்கையின் தங்கொட்டுவா பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனக்கு வந்த மிஸ்டுகால் மூலம் ஏறப்ட்ட பழக்கத்தில் ஒருவரை காதலித்து, அவரிடம் தனது கற்பை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
அந்த இளம்பெண் ஜவுளிக்கடையில் வேலை பார்க்கும் போது அவருக்கு அடிக்கடி மிஸ்டு கால் வந்துள்ளது. அந்த நம்பருக்கு திரும்ப அழைத்த போது ஒரு வாலிபர் பேசியுள்ளார். பின்னர் இருவரும் நட்பாக பேசி பழக ஆரம்பித்தனர்.
 
இந்த நட்பு நாளடவில் காதலாக மாறி இருக்கிறது. அந்த பெண் தன்னுடைய முழு விபரத்தையும் அந்த வாலிபரிடம் கூறியுள்ளார், ஆனால் அந்த வாலிபர் தன்னை பற்றிய எந்த விபரத்தையும் பகிர்ந்து கொள்ளவில்லை.
 
இந்நிலையில் தன்னை சந்திக்க அந்த இளம்பெண்ணை கொலும்புக்கு அழைதுள்ளார் அந்த வாலிபர். இதனையடுத்து கொலும்புக்கு சென்று வாலிபரை சந்தித்த பின்னர். இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.
 
அதன் பின்னர் அந்த வாலிபர் சொல்லாமல் கொள்ளாமல் சென்று விட்டார். அதன் பின்னர்தான் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார் அந்த பெண். அதன் பின்னர் நடந்ததை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார் அவர். அவரது பெற்றோர்கள் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த வாலிபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்