ஆஸ்த்ரியாவில் நெடுஞ்சாலை ஒன்றில் கைவிடப்பட்ட லாரி ஒன்றில் 70 க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை அகதிகளின் உடலாக இருக்கலாம் என ஆஸ்த்ரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வியன்னாவை நோக்கியுள்ள இந்த சாலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள அழுகிய நிலையில் உள்ள இந்த உடல்கள் பற்றி விசாரணை நடத்த காவல் துறையினர் அனுப்பப்பட்டுள்ளனர். இந்த வாகனத்தில் உள்ள உடல்கள் இறந்து ஒன்றரை அல்லது இரண்டு நாட்கள் இருக்கும் என காவல்துறை கூறியுள்ளது.