மெக்சிக்கோ சிறையில் கலவரம்: 52 பேர் பலி (வீடியோ இணைப்பு)

வெள்ளி, 12 பிப்ரவரி 2016 (16:44 IST)
மெக்சிக்கோ சிட்டியில் உள்ள மாண்டெர்ரியில் சிறை ஒன்றில் ஏற்பட்ட கலவரத்தில் 52 பேர் பலியாகி உள்ளனர். 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என மாகாண ஆளுநர் உறுதிபடுத்தியுள்ளார்.


 
 
சில தினங்களுக்கு முன் போப் ஆண்டவர் பிரான்சிஸ் வடக்கு மெக்சிக்கோவில் வேறொரு சிறையை பார்வையிட்ட நிலையில், தற்போது ஒரு சிறையில் கலவரத்தில் 52 பேர் இறந்தது அங்கு பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
 
டோப்போ சிப்போ சிறையில் வியாழன் கிழமை நள்ளிரவு நடந்த இந்த கலவரத்தை, இன்று காலை நியூனோ லியோன் மாநிலத்தின் ஆளுநர் ஜெய்மி ரோட்ரிகுஸ் உறுதிபடுத்தி பத்திரிக்கையாளர்களுக்கு தெரிவித்தார்.

 

 
நன்றி: The Guardian
 
கைதிகளுக்கு இடையே நடந்த இந்த மோதலில் பல கைதிகளில் உணவு சேமிப்பு பகுதி, உறங்குமிடம் போன்றவற்றில் அவர்கள் தீ வைத்துள்ளனர் என ரோட்ரிகுஸ் தெரிவித்தார். மேலும் அங்கு துப்பாக்கி சூடு நடத்தப்படவில்லை இருப்பினும் எப்படி 52 பேர் பலியானார்கள் என்பது உடனடியாக தெளிவாக கூறமுடியாது என்றார்.
 
கைதிகள் கலவரத்தின் போது ஏற்படுத்திய தீ விபத்து மட்டுமே மெக்சிக்கோ ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்