பாகிஸ்தானில் வரலாறு காணாத அதிர்ச்சியாக, கராச்சியில் உள்ள சிறை கதவுகள் உடைக்கப்பட்டதாகவும், சுவர்கள் உடைக்கப்பட்டதால் 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியிருக்கலாம் என்றும், தப்பிய கைதிகள் அனைவரும் அபாயகரமானவர்கள் என்றும் கூறப்படுவதால், பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள மலிர் என்ற சிறையில் நேற்று நள்ளிரவில் மிகப்பெரிய கலவரம் நடந்ததாகவும், இந்த கலவரத்தில் முக்கிய சுவர் உடைக்கப்பட்டதால் பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், சிறை காவலர்களின் தகவலின்படி, 50 முதல் 200 கைதிகள் வரை தப்பியிருக்கலாம் என்றும், இதில் பல ஆபத்தான குற்றவாளிகள் இருப்பதாகவும், தப்பி ஓடியவர்களை தேடும் பணியில் சிறை அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.