எட்டு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ஒருவரை, போலீசார், நிர்வாணமாக அழைத்து சென்ற விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அர்ஜெண்டினாவின் புவெனஸ் ஐரிஸ் நகரில் வசிக்கும் ஒருவன், 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளான். அதைக் கண்ட பொதுமக்கள் அவனை பிடித்து அடித்து உதைத்தனர். அதன்பின் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அவனின் கைகளை கட்டி நிர்வாணமாக்கி எல்லோருக்கும் பார்க்கும்படி நடக்க வைத்து, அதன்பின் காரில் ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
அவனை போலீசார் நிர்வாணமாக அழைத்துச் சென்ற போது, சிலர் தங்களது மொபைல் போனில் புகைப்படம் எடுத்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.